இலங்கை செய்தி

கொழும்பில் கணவன் வீட்டில் இல்லாத நேரத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்

ராகம பொலிஸ் பிரிவின் தலகொல்ல பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று மாலை பெண் ஒருவர் கழுத்து அறுத்து தீ வைத்து எரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக ராகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் ராகம, தலகொல்ல பகுதியைச் சேர்ந்த 76 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த பெண் குறித்த வீட்டில் தனது கணவருடன் வாழ்ந்து வந்துள்ள நிலையில் சம்பவம் நடந்த நேரத்தில் கணவர் வேலைக்காக வீட்டை விட்டு வெளியேறியிருந்தார் என தெரியவந்துள்ளது.

பின்னர் வீடு திரும்பிய கணவர், மனைவியை தேடிய போது, ​​அவர் கொலை செய்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்தக் கொலைக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை. சடலம் ராகம மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக ராகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 2 times, 2 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை