ஆசியா

தாய்லாந்து தேசிய பூங்காவில் மூன்று அரிய வகை வங்காள புலி குட்டிகள்

தாய்லாந்தின் தேசிய பூங்கா ஒன்றில் மூன்று அரியவகை புலிக்குட்டிகள் காணப்பட்டுள்ளன.

காய்ங் கிராச்சன் தேசிய பூங்காவில் அரியவகை வங்காளப் புலி ஒன்று, மூன்று குட்டிகளை வளர்த்து வருவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

காப்பகப் பாதுகாவலர்கள் முதலில் ஒரு வங்காளப் புலிக்குட்டியை மட்டுமே கண்டனர். ஆனால், இந்த வாரம் மீட்கப்பட்ட கேமரா பதிவுகளில் மூன்று புலிக்குட்டிகள் இருப்பது தெரிந்தது.

சென்ற ஆண்டு பெய்த கனமழையால் சேதமடைந்த கேமராக்களிலிருந்து அந்தக் காணொளிகள் மீட்கப்பட்டன.

“ஒரு புலி மூன்று குட்டிகளை வளர்ப்பதை நாங்கள் பதிவுசெய்திருப்பது இதுவே முதல்முறையாகும்,” என்று காய்ங் கிராச்சன் தேசிய பூங்காவின் தலைவர் மொங்கோல் சைப்பக்டீ வெள்ளிக்கிழமையன்று (ஜனவரி 31) அறிக்கை ஒன்றில் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

வங்காளப் புலிகள் காணப்படுவது அரிய நிகழ்வாகும்.

 

(Visited 59 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!