இந்தியா

Air India விமானத்தில் பதற்றத்தை ஏற்படுத்திய பயணிகள்

Air India விமானத்தில் பல மணிநேரமாக சிக்கிக்கொண்ட பயணிகள் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள ஆர்ப்பாட்டம் செய்த காணொளி சமூக ஊடகங்களில் வலம் வருகிறது.

விமானம் மும்பையிலிருந்து டுபாய்க்குப் புறப்படவிருந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடந்த சனிக்கிழமை காலை மணி 8.25 மணிக்கு விமானம் புறப்பட வேண்டியது. தொழில்நுட்பக் கோளாற்றினால் பல மணிநேரத் தாமதம் ஏற்பட்டது.

விமானத்தில் இருந்த பயணிகள் ஆவேசமாக பணியாளர்களிடம் பதில்கள் கேட்பது காணொளியில் தெரிந்தது.

அவர்களில் ஒருவர் விமானத்தின் மேற்பரப்பை அடிக்கத் தொடங்கினார். “உங்களை நம்ப முடியாது, கதவைத் திறங்கள்” என பயணிகள் கூச்சலிட்டுள்ளனர்.

பயணிகளின் ஆர்ப்பாட்டம் தீவிரமடைந்த பிறகு அவர்கள் பிற்பகல் 1 மணிக்கு விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

பிறகு ஒருவழியாக விமானம் மாலை 4.32 மணிக்குப் புறப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

SR

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!