இலங்கை

இலங்கை: கோர விபத்தில் சிக்கி இருவர் பலி 14 பேர் காயம்

ஹப்புத்தளை – பெரகல வீதியின் 48வது மைல்கம்பத்தில் இன்று இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 14 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

16 பயணிகளுடன் சென்ற வேன் ஒன்று விபத்துக்குள்ளானதாகவும், இதன் போது காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

முதற்கட்ட விசாரணையில் வேன் இயந்திரக் கோளாறினால் வாகனத்தை நிறுத்துவதற்காக வீதியிலிருந்த பெரிய பாறாங்கல் மீது மோதி விபத்துக்குள்ளானதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர்கள் ஹொரணை பிரதேசத்தை சேர்ந்த 55 வயதுடைய பெண் மற்றும் 65 வயதுடைய ஆண் என பொலிஸார் தெரிவித்தனர்

(Visited 3 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!