ஆசியா

நடுவானில்விமானத்தின் அவசரக் கதவைத் திறக்க முயற்சித்த தாய்லாந்து நாட்டவரால் பரபரப்பு

தாய்லந்தைச் சேர்ந்த நபர் ஒருவர் நடுவானில்விமானத்தின் அவசரக் கதவைத் திறக்க முயற்சி செய்துள்ளார்.

Thai Airways விமானத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. போதைப்பொருள் உட்கொண்ட பிறகு நபர் அவ்வாறு செய்திருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

எனினும் சுற்றி இருந்த பயணிகள் அவரைத் தடுத்து நிறுத்தியுள்ளனர். சம்பவத்தைப் பயணிகள் சிலர் படம் பிடித்தனர்.

காணொளியைச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தவர், “நான் 10 ஆண்டுகளுக்கும் மேலாக விமானத்தில் பயணம் செய்திருக்கிறேன். இதுபோன்ற சூழ்நிலையை முதன்முறையாக எதிர்நோக்கினேன்” என குறிப்பிட்டுள்ளார்.

அந்தக் காணொளி சமூக வலைத்தளங்களிலிருந்து நீக்கப்பட்டது. விமானம் பேங்காக்கின் விமான நிலையத்தில் தரையிறங்கியதும் பொலிஸ் அதிகாரிகளும் விமானத்துறை ஊழியர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து நபரை கைதுசெய்தனர்.

ஆடவரைத் தடுத்து நிறுத்த உதவிய பயணிகளுக்கு Thai Airways நிறுவனம் நன்றி கூறியது.

பயணிகளின் பாதுகாப்புக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவசரச் சூழ்நிலை ஏற்படும்போது அதனைச் சமாளிக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்படும் எனவும் உறுதியளித்தது.

தைவானிலிருந்து பேங்காக் நகருக்குச் சென்றுகொண்டிருந்த TG637 விமானச் சேவையில் சம்பவம் நடந்தது.

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!