இலங்கை செய்தி

இலங்கையில் வருமான வரி கணக்கை சமர்ப்பிக்காதவர்களுக்கு விசேட அறிவிப்பு

இலங்கையில் வருமான வரி கணக்கை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு இறைவரி திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

அதற்கமைய 2023 – 2024 ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 7ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில், உள்நாட்டு இறைவரி திணைக்களத்தினால் வருமான வரிக் கணக்கைச் சமர்ப்பிப்பதற்கு நவம்பர் 30ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

எவ்வாறிருப்பினும், சீரற்ற வானிலை காரணமாக பல பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டு, அந்த கால அவகாசத்தை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரி செலுத்துவோர் புதிய காலக்கெடுவுக்குள் அல்லது அதற்கு முன்னதாக சமர்ப்பித்தால் அபராதம் அல்லது சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ளமாட்டார்கள் என்று திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

(Visited 4 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை