இந்தியா செய்தி

கங்கை நீர் குறித்து எச்சரிக்கை விடுத்த மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்

உத்தரகாண்ட் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஒவ்வொரு மாதமும் உத்தர பிரதேச எல்லை அருகே ஹரித்துவாரைச் சுற்றியுள்ள 8 இடங்களில் கங்கை நீர் பரிசோதனை செய்யப்படுகிறது.

அதன்படி நதி நீர் A முதல் E வரை 5 வகைகளாகப் பிரிக்கப்படுகிறது.

A என்பது மிக குறைந்த நச்சுத்தன்மை கொண்டது. அந்த தண்ணீரை கிருமி நீக்கம் செய்த பிறகு குடிநீராக பயன்படுத்தலாம்.

அதே சமயம் E என்றால் அதிக நச்சுத்தன்மை கொண்டது என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், நவம்பர் மாதத்திற்கான சமீபத்திய சோதனையில் கங்கை நதி நீர் B வகையாக இருப்பது கண்டறியப்பட்டது.

இதன் மூலம் ஹரித்துவாரில் கங்கை நதி குடிப்பதற்கு உகந்தது அல்ல என தெரிய வந்துள்ளது. அதே சமயம், அந்த நீர் குளிப்பதற்கு ஏற்றது என மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

(Visited 45 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி