இலங்கை : தேங்காய் விலை அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கம் முன்வைத்துள்ள தீர்வு!

இலங்கையில் நிலவும் தேங்காய் விலை நெருக்கடிக்கு தீர்வாக அடுத்த 2 வாரங்களுக்குள் 10 இலட்சம் தேங்காய்களை புறநகர் பகுதிகளுக்கு விநியோகிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, சதொச ஊடாக ஒரு தேங்காய் 130 ரூபாவிற்கு வழங்கவுள்ளதாக அமைச்சர் வசந்த சமரசிங்க இன்று (04) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அரசாங்கத்திற்கு சொந்தமான தோட்டங்களில் கிடைக்கும் தென்னை உற்பத்திகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் என வர்த்தக, வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் திரு.வசந்த சமரசிங்க மேலும் தெரிவித்தார்.
(Visited 17 times, 1 visits today)