இலங்கை

இலங்கையில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

இலங்கையில் அரிசிக்கு கடும் தட்டுப்பாடு நிலவக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் தேவையான அரிசியை அரசாங்கம் இறக்குமதி செய்யாவிட்டால் இந்நிலை ஏற்படும் என அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் யூ.கே.சேமசிங்க, அரிசி தட்டுப்பாட்டைத் தீர்க்க அரசாங்கம் நீண்டகால வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

“அரசாங்கம் நீண்ட கால தீர்விற்கு செல்ல வேண்டும்.இல்லையென்றால் நாடு மற்றுமொரு நெருக்கடியை சந்திக்க நேரிடும்.

நெல் சந்தைப்படுத்தல் சபை இந்த நெருக்கடியை போக்குவதற்கு ஒரு முறையான வேலைத்திட்டத்தை தயாரித்து யால பருவத்திற்கான நெல்லை கொள்வனவு செய்ய வேண்டும்.

குறுகிய கால தீர்வாக மிக விரைவில் அரிசி, இவ்வாறான சூழ்நிலையில் சந்தையில் அரிசிக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்படலாம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

(Visited 74 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்