ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியர்களை குறிவைக்கும் நிதி மோசடிகளைத் தடுக்க விளம்பர விதிகளை கடுமையாக்கியுள்ள மெட்டா

ஆஸ்திரேலியர்களைக் குறிவைக்கும் நிதி மோசடிச் செயல்களைத் தடுக்க இன்ஸ்டகிராம், ஃபேஸ்புக் சமூக ஊடகத் தளங்களை நடத்தும் மெட்டா நிறுவனம், நிதிச் சேவை விளம்பரங்களுக்குக் கடுமையான விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

திங்கட்கிழமையன்று (டிசம்பர் 2) மெட்டா அத்தகவலை வெளியிட்டது.

கடந்த அக்டோபர் மாதம் போலியெனக் கூறப்படும் 8,000 விளம்பரங்களைத் தனது சமூக ஊடகத் தளங்களிலிருந்து அகற்றியது. ஆஸ்திரேலிய வங்கிகளுடன் இணைந்து மெட்டா அந்நடவடிக்கையை எடுத்தது. அந்த விளம்பரங்கள், பிரபலமானவர்களின் படங்களைக் கொண்டு மக்களைப் போலி முதலீட்டுத் திட்டங்களுக்கு ஈர்ப்பதாக நம்பப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து கடுமையான விதிமுறைகள் இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

புதிய விதிமுறைகளின்கீழ் சம்பந்தப்பட்ட விளம்பரத்தால் பலனடைவோர், அதற்குக் கட்டணம் செலுத்தியவர்கள் ஆகியோரின் விவரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும். சம்பந்தப்பட்டவர்களின் ஆஸ்திரேலிய நிதிச் சேவைகள் உரிம எண் உள்ளிட்ட விவரங்கள் அவற்றில் அடங்கும்.

அதன் பிறகே அவர்கள் நிதிச் சேவை விளம்பரங்களை வெளியிட முடியும் என்று மெட்டா தெரிவித்தது. உறுதி செய்யப்பட்ட விவரங்கள் விளம்பரங்களில் இடம்பெறுவதும் புதிய விதிமுறைகளின்கீழ் கட்டாயமாகும்.

(Visited 59 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித
error: Content is protected !!