இலங்கை

இலங்கை வாகனத்தை திருடிய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் 8.3 மில்லியன் பெறுமதியான வான் ஒன்றை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் 28 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நவம்பர் 09 ஆம் திகதி திருடப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட வாகனம் தொடர்பில் ஹட்டன் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கஹவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓப்பவத்தை பிரதேசத்தில் வைத்து நேற்று சனிக்கிழமை காலை இந்த கொள்ளை சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது வாகனம் வவுனியா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அது பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

ஹட்டன் பொலிஸாரின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!