இலங்கை செய்தி

நடு வீதியில் ஹரின் பொலீசாருடன் ஆவேசம்

முன்னாள் அமைச்சர் ஹரீன் பெர்னான்டு தனது சகாக்களுடன் இன்று பதுளை நகரில் சட்டத்துக்கு முரணாக தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டபோது போது பொலீசார் மற்றும் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் அதனை தடுத்ததினால் இரு தரப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதத்தில் ஏற்பட்டது

இதனால் பதுளை நகர மத்தியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

நகரில் இவர்கள் பட்டாசு கொளுத்தி துண்டு பிரசுரங்களை விநியோகித்தவாறு ஊர்வலம் செல்ல முற்பட்டதால் அதிகாரிகள் முயற்சிக்கு தடை விதித்துள்ளனர்.

இதனால் முன்னாள் அமைச்சர் ஹரீன் பெர்ணான்டுவுக்கும் அதிகாரிகளுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் மூண்டுள்ளது.

இச்சந்தர்ப்பத்தில் ஆவேசத்துடன் செயல்பட்ட ஹரீன் பெர்னான்டு தனது மேலங்கியை கழற்றி வீசி விட்டு நகரின் பல இடங்களிலும் அலைந்து திரிந்துள்ளார்.

இச்சந்தர்ப்பத்தில் நீண்ட நேரம் போக்குவரத்து தடை ஏற்பட்டதாகவும் இவரால் பொலீசார் எச்சரிக்கப்பட்டதாகவும் ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!