ஐரோப்பா

பிரான்ஸிலிருந்து பிரித்தானியா நோக்கி பயணித்த படகு ஒன்று மூழ்கியதில் மூவர் பலி

பிரான்ஸில் இருந்து பிரித்தானியா நோக்கி பயணித்த படகு ஒன்று மூழ்கியதில், மூவர் உயிரிழந்துள்ளனர்.

புதன்கிழமை அதிகாலை இச்சம்பவம் பாது கலே கடற்கரையில் இருந்து 2 கடல் கிலோமீற்றர் தூரத்தி இடம்பெற்றுள்ளது.

சிறிய காற்று நிரப்பிய படகு ஒன்றில் 50 வரையான அகதிகள் பயணித்த நிலையில், படகு பாரம் தாங்காமல் கடலில் மூழ்கியுள்ளது.

கடற்படையினர் உதவிக்கு அழைக்கப்பட்டு, அவர்கள் மீட்கப்பட்டனர்.

45 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். மூவர் கடலில் மூழ்கி பலியாகியுள்ளனர். இருவர் தேடப்பட்டு வருகின்றனர். அகதிகளில் பலர் பாதுகாப்பு மேலங்கி அணிந்திருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டில் இதுபோன்ற கடற்பயணங்களில் இதுவரை 50 பேர் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 1 times, 1 visits today)
See also  ஸ்காட்லாந்தைத் தாக்கும் ஆஷ்லே புயல்! ஆம்பர் எச்சரிக்கை
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content