இந்தியா செய்தி

உத்தரபிரதேசத்தில் பணம் தர மறுத்த தாயை நண்பர்களுடன் இணைந்து கொலை செய்த மகன்

காஜியாபாத்தில் ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சுமார் மூன்று வாரங்களுக்குப் பிறகு, அவரது மகன் தனது இரு நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டிஜே மிக்சரை(இசை பெட்டி) பழுது பார்க்க பணம் தர மறுத்ததால் இந்த குற்றம் நிகழ்ந்துள்ளது.

நாற்பத்தேழு வயதான சங்கீதா தியாகியின் சடலம் காஜியாபாத்தின் ட்ரோனிகா சிட்டி பகுதியில் அக்டோபர் 4ஆம் தேதி காலை மீட்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் இவரது மகன் சுதிர் பல வழிப்பறி மற்றும் பிற குற்ற வழக்குகளில் குற்றவாளியாக இருப்பது தெரியவந்தது.

பணம் தர மறுத்ததால் அக்டோபர் 3ம் தேதி இரவு, சங்கீதாவை பைக்கில் ஏற்றிக் கொண்டு, நண்பர்கள் அங்கித், சச்சின் ஆகியோர் காத்திருந்த இடத்திற்குச் சென்றார். அங்கு, செங்கல்லால் தலையில் அடித்து கொலை செய்தனர். டிரோனிகா சிட்டி பகுதியில் உடலை அப்புறப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!