தென் கொரியா மற்றும் உக்ரைனை கடுமையாக எச்சரிக்கும் கிம்மின் சகோதரி!

கிம் ஜாங்-உன்னின் சகோதரி, உக்ரைன் மற்றும் தென் கொரியா இரண்டையும் “நாய்கள்” மற்றும் “பைத்தியக்காரர்கள்” என்று விமர்சித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வட கொரிய வீரர்கள் ரஷ்யாவில் விளாடிமிர் புட்டினுக்காக போராடத் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் 37 வயதான கிம் யோ ஜாங், ட்ரோன் ஊடுருவல் மூலம் வடகொரியாவின் இறையாண்மையை தென்கொரியா மீறியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் உக்ரைன் மீது தனது படைகளை கட்டவிழ்த்து விடுவதற்கு பியோங்யாங் தயாராக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சியோல் மற்றும் கிய்வ் ஆகிய இரு நாடுகளும் அணுவாயுத நாடுகளுக்கு எதிராக பொறுப்பற்ற கருத்துக்களை பரப்பி வருவதாகவும் அவர் மேலும் விமர்சித்துள்ளார்.
(Visited 28 times, 1 visits today)