இலங்கை செய்தி

அனுர குமார திஸாநாயக்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்தமைக்கு மக்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் : பிமல் ரத்நாயக்க

ஊழல் மற்றும் இனவாத அரசியல்வாதிகள் தோல்வியைத் தவிர்ப்பதற்காக இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று தெரிவு செய்தது, தேசிய மக்கள் சக்தி பெற்ற மாபெரும் வெற்றி என்று உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலுக்கான வேட்பு மனுப் பட்டியலை கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ஊழல்வாதிகள் மற்றும் இனவாத அரசியல் வாதிகளின் அரசியலை இறுதியில் முடிவுக்கு கொண்டு வந்த அனுர திஸாநாயக்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்தமைக்காக தேசிய மக்கள் சக்தி மக்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என குறிப்பிட்டார்.

அநுரகுமார திஸாநாயக்கவை ஜனாதிபதியாக வாக்களித்த மக்கள், ஊழல் அரசியல்வாதிகளை அரசியலில் இருந்து அகற்றி பெரிய காரியத்தை செய்தார்கள். இந்த அரசியல்வாதிகள், உடனடி தோல்வியில் இருந்து தப்பிக்கப் போட்டியிடுவதில்லை எனத் தீர்மானித்துள்ளனர்.

வேட்புமனுக்களை கையளித்த பின்னர் தேசிய மக்கள் சக்தி தனது தேர்தல் பிரச்சாரத்தை விரைவில் ஆரம்பிக்கும் என பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டார்.

(Visited 3 times, 1 visits today)
Avatar

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content