பொழுதுபோக்கு

ரெடியாகும் ஜெய்லர் – 2… நெல்சனுக்கு அடித்த அதிஷ்டம்

கோலமாவு கோகிலா படத்தில் துவங்கிய நெல்சன் திலீப்குமாரின் சினிமா பயணம் கடந்த ஆண்டில் ஜெயிலர் படம் மூலம் மிகவும் பிரம்மாண்டமாக தொடர்ந்து வருகிறது. அடுத்தப்படத்திலும் இவர் ரஜினிகாந்தையே ஜெயிலர் 2 படத்திற்காக இயக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதன் ப்ரீ புரொடக்ஷன்ஸ் வேலைகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

ரஜினிகாந்த் நடிப்பில் வரும் 10ம் தேதி வேட்டையன் படம் ரிலீசாகவுள்ள நிலையில், அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

இந்தப் படங்களை தொடர்ந்து அடுத்த ஆண்டில் ஜெயிலர் 2 படத்தில் ரஜினிகாந்த் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே ஜெயிலர் 2 படத்தை தொடர்ந்து அடுத்ததாக தெலுங்குப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளதாக தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் படத்தில் ஜூனியர் என்டிஆரை அவர் இயக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக இந்தப் படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவிருந்த நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் விலகியுள்ளார்.

தேவரா படத்தை தொடர்ந்து ஜூனியர் என்டிஆரின் இந்தப் படத்திலும் அனிருத் இசையமைக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்காக நெல்சன் திலீப்குமார் மிகப்பெரிய தொகையை சம்பளமாக பெறவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

See also  அஜித்தின் “விடாமுயற்சி”யை டொனால்ட் டிரம்பிடம் கேட்ட ரசிகர்கள்

முன்னதாக தேவரா படத்தின் பிரமோஷன்களுக்காக சென்னை வந்திருந்த ஜூனியர் என்டிஆர், வெற்றிமாறன் இயக்கத்தில் நேரடி தமிழ் படத்தில் நடிக்கும் விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தார். இதேபோல கோலிவுட்டின் இளம் இயக்குநர்களுடன் இணையவும் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது அவரது ஆசை அடுத்தடுத்து நிறைவேறும் என்று தெரிகிறது.

(Visited 2 times, 2 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content