கொள்ளை இலாப மாபியாவை கட்டுப்படுத்த ஹரிணி அதிரடி
டொலரின் விலை கணிசமாக குறைந்து உள்ள நிலையில் பொருட்களின் விலைகள் குறையாமல் இருக்கும் மர்மத்தை கண்டறிந்து பொருட்களின் உற்பத்தி இறக்குமதிகளின் செலவுக்கும் இப்பொருட்கள் நுகர்வோருக்கு விற்கப்படும் விலைக்கும் இடையில் காணப்படுகின்ற பாரிய இடைவெளியை ஏற்படுத்தும் வியாபார மாபியாவை இணங்கான பிரதமரும் வர்த்தக நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சருமான ஹரிணி அமரசூரிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
இதற்கிணங்க நியமிக்கப்படவுள்ள விசேட கமிட்டி சந்தையில் நிலவும் பொருட்களின் விலைகள் தொடர்பில் பூரண விளக்க அறிக்கை ஒன்றை தயாரித்து கையளிக்குமாறு கமிட்டி உறுப்பினர்கள் வேண்டப்படவுள்ளனர் அதன் பின் நாட்டின் உற்பத்தியாளர்கள் இறக்குமதியாளர்கள் அழைக்கப்பட்டு பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.