சாகோஸ் தீவுகளை மொரிஷியஸிடம் ஒப்படைக்கும் இங்கிலாந்து : பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பான கவலைகளுக்கு தீர்வு!

பசிபிக் பெருங்கடலில் ஒரு இரகசிய இராணுவ தளத்தின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்காக சாகோஸ் தீவுகளை மொரிஷியஸிடம் ஒப்படைக்க பிரிட்டன் ஒப்புக்கொண்டது.
ஒரு புதிய ஒப்பந்தத்தின் கீழ் தீவுக்கூட்டத்தின் மீது மொரீஷியஸின் இறையாண்மையை அங்கீகரிப்பதாகக் கூறியுள்ளது.
இது குறைந்தது அடுத்த 99 ஆண்டுகளுக்கு டியாகோ கார்சியாவில் இராணுவத் தளத்தை இயக்க பிரிட்டனின் உரிமைகளைப் பாதுகாக்கிறது.
இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் உடன்படிக்கையைத் தொடர்ந்து தளத்தின் நிலை சந்தேகத்திற்கு இடமின்றி சட்டப்பூர்வமாக பாதுகாப்பாக இருக்கும் என்று வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.
“எங்கள் அமெரிக்க பங்காளிகளால் ஆதரிக்கப்படும் இந்த ஒப்பந்தம் சர்வதேச பாதுகாப்பைப் பாதுகாக்கும் என்றும் சாத்தியமான சட்டவிரோத இடம்பெயர்வு பாதையை மூடும் அதேவேளை மேலும் இந்தியப் பெருங்கடலில் அமைதி மற்றும் செழிப்புக்கான அச்சுறுத்தல்களைத் தவிர்க்கும்.”என்றும் கூறப்படுகிறது.
இதேவேளை இந்த ஒப்பந்தம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், “இராஜதந்திரம் மற்றும் கூட்டாண்மை மூலம், நாடுகள் அமைதியான மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் விளைவுகளை அடைய நீண்டகால வரலாற்று சவால்களை சமாளிக்க முடியும் என்பதற்கு தெளிவான நிரூபணம்” என்று வரவேற்றுள்ளார்.