இலங்கை

இலங்கை – நெல் விவசாயிகளுக்கு உர மானியம் வழங்குவதில் எந்த சிக்கலும் இல்லை!

இலங்கை – நெல் விவசாயிகளுக்கு உர மானியம் ஹெக்டேருக்கு ரூ.25,000 வழங்குவதில் சிக்கல் இல்லை என விவசாய அமைச்சின் செயலாளர் எம். பி. என். எம். விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க விவசாய அமைச்சுக்கு விஜயம் செய்து அனைத்து அதிகாரிகளுடனும் முன்னேற்ற மீளாய்வு கலந்துரையாடலை நடாத்திய பின்னர் எம். பி. என். எம். விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், உர மானியம் 25,000 ரூபாய் வழங்குவதில் எந்தப் பிரச்னையும் இருக்காது. முன்பணமாக 15,000 ரூபாய் செலுத்தி, 10,000 ரூபாய் தேர்தல் முடிந்ததும் கொடுக்க ஏற்பாடு செய்யலாம். 25,000 ரூபாய் கூட கொடுப்பதில் சிக்கல் இருப்பதாகத் தெரியவில்லை.”எனக் கூறினார்.

இதன்வேளை உரங்களை கொள்வனவு செய்யும் போது QR குறியீட்டு முறையை தயார் செய்யுமாறு விவசாயிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!