இலங்கை செய்தி

இலங்கையில் நடந்த சோகம் – நபரின் உயிரை பறித்த வாழைப்பழம்

பலாங்கொடை பிரதேசத்தில் வாழைப்பழம் தொண்டையில் சிக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

பலாங்கொடை வெலிகேபொல பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அந்த நபரின் மரணம் தொடர்பாக பலாங்கொடை அடிப்படை வைத்தியசாலை சட்ட நிபுணர் எம்.ஜி. கேடி சத்யா தலைமையில் நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில், தொண்டையில் வாழைப்பழம் சிக்கியதால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு மரணம் நிகழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த மரணம் தொடர்பிலான சாட்சியங்களை ஆராயும் போது உயிரிழந்தவரின் மனைவி, தனது கணவர் வீட்டில் சாப்பிட்டுவிட்டு வாழைப்பழம் சாப்பிட்டுக் கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.

அவர் திடீரென தரையில் விழுந்துவிட்டதாகவும், பின்னர் அவரை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

மருத்துவரிடம் அழைத்துச் சென்ற போதும் தனது கணவர் கோமா நிலையில் இருந்ததாக குறித்த பெண் சாட்சியத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.

(Visited 18 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!