இலங்கை செய்தி

லெபனான் மற்றும் சிரியாவுக்குச் செல்லும் இலங்கையர்களுக்கு அறிவிப்பு

மறு அறிவித்தல் வரை இலங்கையர்கள் லெபனான் மற்றும் சிரியாவிற்கு செல்வதை தவிர்க்குமாறு வெளிவிவகார அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் மோதல் சூழ்நிலை காரணமாக இந்த பயண ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

தற்போது இரு நாடுகளிலும் தங்கியுள்ள இலங்கையர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும், தங்குமிடங்களுக்கு வெளியே நடமாடுவதை தவிர்க்குமாறும் வெளிவிவகார அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.

பெய்ரூட்டில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் டமாஸ்கஸில் உள்ள துணைத் தூதரகத்துடன் தொடர்பில் இருக்குமாறு இலங்கையர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதற்காக slemb.beiruit@mfa.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரி பயன்படுத்தப்பட உள்ளதுடன், மேலதிக தகவல்களை பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

சனத் பாலசூரிய – 0094 771102510

பிரியங்கி திஸாநாயக்க – 0094 718381581

ஃபஹத் ஹவ்வா – 00961 81485809

அல் ட்ராபி – 00963 944499666, 00963 833863 90

(Visited 2 times, 2 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content