இலங்கை

இலங்கை: நில்வலா ஆற்றில் குதித்த நபர்: காப்பற்றிய ராணுவ வீரர்கள்

இன்று காலை மாத்தறை நில்வலா ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள எண்ணிய நபரொருவரை கெமுனு கண்காணிப்பு படையணியின் இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.

மாத்தறை மஹாநாம பாலத்தில் இருந்து குதித்த நபரை இராணுவ வீரர்கள் மீட்டு மாத்தறை பொது வைத்தியசாலையில் சேர்த்தனர்.

பாலத்தில் இருந்து குதித்த நபர் ஆற்றில் அடித்துச் செல்லப்படுவதை பாலத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த இராணுவ வீரர்கள் பார்த்ததாக தெரிவிக்கப்படுகிறது.

விரைவாகச் செயல்பட்ட வீரர்கள், தங்கள் முகாமுக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த படகைப் பயன்படுத்தி பெரும் முயற்சிக்குப் பிறகு அந்த நபரைக் காப்பாற்றினர்.

உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றவர் 50 முதல் 60 வயதுக்கு இடைப்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

(Visited 4 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!