இந்தியா செய்தி

மது அருந்துவதை தடுத்த தந்தையை கொலை செய்த மகன்

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் இளைஞர் ஒருவர் குடிப்பதை தடுக்க முயன்ற தந்தையை கொலை செய்துள்ளார்.

அவர் தனது தந்தையின் தலையில் செங்கலால் தாக்கியதாகவும், அவர் இறந்துவிட்டதைக் கண்டு, தற்கொலை போல மாறுவேடமிட முயன்றதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

“ஒரு வாக்குவாதத்திற்கு பிறகு, கோரக்பூரைச் சேர்ந்த கன்ஹையா திவாரி தனது தந்தையின் தலையில் தாக்கினார் பின்னர் அவர் தற்கொலை செய்து கொள்வது போல் மின்விசிறியில் தூக்குபோட முயன்றார்.பின்னர் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்” என உத்தரபிரதேச காவல்துறையின் மூத்த அதிகாரி ஜிதேந்திர ஸ்ரீவஸ்தவா.

சத்ய பிரகாஷ் திவாரியின் மனைவி முன்னதாக இறந்துவிட்டார். அவர் தனது ஒரே மகனுடன் கிராமத்தில் வசித்து வந்தார். இருவரும் கூலி வேலை செய்து வந்தனர்.

கன்ஹையா திவாரி தினமும் மது அருந்துவது வழக்கம், இதனால் வீட்டில் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாக அப்பகுதியினர் தெரிவித்தனர்.

(Visited 32 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி