பொழுதுபோக்கு

நடிகரின் அரவணைப்பில் சொகுசாக இருக்கும் இளம் நடிகை…

புதுப்புது நடிகைகளின் வரவுகளால் திரையுலகமே தடுமாறிக் கொண்டிருக்கிறது. கொஞ்சம் உஷாராக இல்லை என்றால் இருக்கும் இடம் தெரியாமல் போய்விட வேண்டிய நிலைமை ஹீரோயின்களுக்கு வந்துள்ளது.

அதனாலேயே தற்போது இளம் நடிகை ஒருவர் பிரபல நடிகரை கெட்டியாக பிடித்துக் கொண்டாராம். வந்த புதிதில் அடுத்தடுத்த படங்களில் நடித்து பிசியாக இருந்த நடிகை தற்போது பிரபலம் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.

இருவரும் ஒரு படத்தில் ஒன்றாக நடித்த நிலையில் தற்போது நடிகை முழுவதும் நடிகரின் ஆதரவில் தான் இருந்து வருகிறாராம்.

அவருக்கு எந்த குறையும் வைக்காமல் அரவணைத்து சொகுசாக பார்த்து வருகிறாராம் அந்த ஹீரோ.

ஆனால் இந்த விவகாரம் நடிகரின் வீட்டுக்கு தெரியவந்ததில் மனைவி பத்திரகாளியாக மாறி இருக்கிறார். சத்தம் இல்லாமல் இது உண்மைதானா என விசாரித்ததில் கணவரின் சில்மிஷ வேலைகள் அம்பலத்திற்கு வந்திருக்கிறது.

இதை வைத்து பார்க்கும் போது எப்போது வேண்டுமானாலும் இந்த பஞ்சாயத்து பூதாகரமாக வெடிக்கும் என்கின்றனர். ஆனால் நடிகருக்கு இதை எப்படி சமாளிக்க வேண்டும் என்ற சூட்சுமம் தெரியும்.

அதனால் எப்படியும் மனைவியை சரி கட்டி விடுவார் என சத்தம் இல்லாமல் கிசுகிசுத்து வருகின்றனர். ஆனால் ஒன்றுமே தெரியாமல் அப்பாவி போல் இருந்த நடிகை இப்படி ஒரு வேலையை சைலன்டாக பார்த்திருப்பது தான் நம்ப முடியாத அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

(Visited 3 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content