நம்பிக்கைக்குரியவர்களுக்கு முதலிடம் வழங்கும் இலங்கை ஜனாதிபதி – பதவி விலகும் அமைச்சரவை

புதிய ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க நியமிக்கப்பட்டதை அடுத்து, பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று பதவி விலகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய பிரதமர் மற்றும் தற்போது பிரதிநிதித்துவப்படுத்தும் முழுமையான அமைச்சரவை அமைச்சர்களும் இன்று அமைச்சர் பதவியை விட்டு விலகவுள்ளனர்.
எவ்வாறாயினும், புதிய ஜனாதிபதி தனது கடமைகளை ஆரம்பித்த பின்னர் அவருக்கு நெருக்கமான நம்பிக்கைக்குரியவர்கள் அமைச்சரவையில் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய, தற்போது அமைச்சுப் பதவிகளில் கடமையாற்றும் அமைச்சர்களும் அவரது தனிப்பட்ட ஊழியர்களும் வெளியேறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
(Visited 12 times, 1 visits today)