பொழுதுபோக்கு

கோட் பட நடிகை மீது அடிதடி கேஸ்.. அப்படி என்ன செஞ்சிட்டாங்க?

மலையாளத்திலும் தமிழிலும் கவனிக்கும் நடிகையாக வலம் வருபவர் பார்வதி நாயர். அண்மையில் வெளியான தளபதி விஜய்யின் ‘தி கோட்’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் மீது தற்போது சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகை பார்வதி நாயர் கடந்த 2022ஆம் ஆண்டு தனது வீட்டில் இருந்து ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடுபோனதாகவும் அதற்கு காரணம் வீட்டில் பராமரிப்பாளராக பணிபுரிந்த சுபாஷ் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகார் பரபரப்பைக் கூட்டியது.

இதனைத் தொடர்ந்து தன்னை, பார்வதி நாயர் உள்ளிட்ட மொத்தம் ஏழு பேர் கண்மூடித் தனமாக தாக்கியதாக சுபாஷ் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

நடிகை பார்வதி நாயர் ஒருவர் மீது புகார் அளித்ததே அதிர்ச்சியைக் கிளப்பிய நிலையில், பார்வதி நாயரால் தாக்கப்பட்டேன் என புகார் அளித்திருப்பது மேலும் பரபரப்பைக் கூட்டியது.

தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தது மட்டும் இல்லாலமல், சென்னையில் உள்ள சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார்.

நடிகை பார்வதி நாயர் மீது அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்க, கடந்த ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, நடிகை பார்வதி நாயர் உள்ளிட்ட 7 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக தெரிந்து கொண்ட நெட்டிசன்கள் நடிகை பார்வதி நாயர் தனது வீட்டில் வேலை பார்த்தவர் மீது சந்தேகத்தின் பேரில்தான் புகார் அளித்துள்ளார்.

சிசிடிவி காட்சிகள் போன்ற ஆதாரங்கள் இருந்தால் அதனை காவல் நிலையத்தில் ஒப்படைக்கலாம். அதைவிடுத்து, தனது வீட்டில் பணியாளராக இருந்தவரை தாக்குவது சரியா என கேள்வி எழுப்புகின்றனர்.

(Visited 1 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content