ஆசியா செய்தி

பாலஸ்தீனத்தில் நடந்த தாக்குதலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இஸ்ரேல் ராணுவ வீரர் மரணம்

பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையில் வாகன மோதல் தாக்குதலில் 24 வயதான இந்திய வம்சாவளி இஸ்ரேலிய வீரர் கொல்லப்பட்டுள்ளார்.

மேற்குக் கரையின் Beit El குடியேற்றத்திற்கு அருகில் நடந்த வாகன மோதல் தாக்குதலில் Bnei Menashe சமூகத்தை சேர்ந்த 24 வயதான இந்திய வம்சாவளி இஸ்ரேலிய வீரர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொல்லப்பட்ட ராணுவ அதிகாரியான சார்ஜென்ட் ஜெரி கிதியோன் ஹங்கல் Nof HaGalil பகுதியில் வசித்து வருவதுடன் Kfir Brigade’s Nahshon படைப்பிரிவின் வீரர் என்றும் இஸ்ரேலிய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.

கொல்லப்பட்ட கிதியோன் ஹங்கல் 2020ம் ஆண்டு இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் இருந்து இஸ்ரேலுக்கு குடியேறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில், மத்திய வெஸ்ட் பேங்க் நகரின் Rafat சேர்ந்த 58 வயதான Hayil Dhaifallah என்ற நபர் தான் சந்தேக நபர் என இஸ்ரேலிய பாதுகாப்பு படை பெயர் அடையாளங்களை வெளியிட்டுள்ளது.

(Visited 45 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!