இந்தியா செய்தி

மகாராஷ்டிராவில் 15 கிலோமீற்றர் இறந்த பிள்ளைகளை தோளில் சுமந்து சென்ற பெற்றோர்கள்

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உயிரிழந்த தனது மகன்களின் சடலங்களைப் பெற்றோர் தோள் மீது சுமந்து செல்ல வற்புறுத்தப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மகன்களை உரிய நேரத்திற்கு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல முடியாததால், பெற்றோர் தங்களது இரு மகன்களையும் பறிகொடுத்தனர்.

உரிய நேரத்தில் சிகிச்சை வழங்கப்படத நிலையில்,குறித்த இருவரும் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

உயிரிழந்த மகன்களின் சடலங்களை அவர்களது கிராமத்திற்கு எடுத்துச் செல்ல முறையான நோயாளர் காவு வண்டி வசதி கூடச் செய்து கொடுக்கப்படவில்லை.

இதன் காரணமாக அவர்கள் தங்களது பிள்ளைகளின் சடலங்களை சுமார் 15 கிலோமீற்றர்கள் வரை தோளில் சுமந்த படி நடந்து சென்றுள்ளனர்.

இதேவேளைக் குறித்த பெற்றோர் தங்களது பிள்ளைகளின் சடலங்களைத் தோளில் சுமந்து கொண்டு, சேறு நிறைந்த காட்டுப் பாதையில் நடந்து செல்லும் காணொளியை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் விஜய் வடேட்டிவார் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

(Visited 45 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!