விதிகளை மீறினால் தேர்தல் முடிவுகள் வழங்கப்படாது – ஊடக நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

நாட்டில் உள்ள அனைத்து ஊடக நிறுவனங்களும் தேர்தல் சட்டத்திற்கு அமைவாக நடுநிலையுடன் செயற்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சில ஊடக நிறுவனங்கள் சில எதிர்பார்ப்புகளை ஊக்குவிப்பதாக ஆணைக்குழுவுக்கு தொடர்ச்சியாக முறைப்பாடுகள் வருவதாக அதன் தலைவர் ஆர்.எம்.ஏ.பி. ரத்நாயக்க கூறுகிறார்.
இது குறித்து நிறுவனங்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அறிவுறுத்தல்களின்படி செயல்படாவிட்டால், எதிர்காலத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
அந்த நிறுவனங்களுக்கு தேர்தல் ஆணையம் வெளியிடும் அறிவிப்புகள் பெறப்படாது என்றும், தேர்தல் முடிவுகள் அவற்றிற்கு வழங்கப்படாது என்றும் அவர் கூறினார்.
(Visited 13 times, 1 visits today)