உலகம்

கடும் வறட்சி: வன விலங்குகளை கொல்ல நமீபியா அரசு திட்டம்

தென் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நமீபியாவில் கடந்த அரை நூற்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் வறட்சி நிலவுகிறது.

பசி, பட்டினி அதிகரித்துள்ள நிலையில், பசியால் வாடும் 14 லட்சம் மக்களுக்கு உணவளிக்க காட்டில் வாழும் வனவிலங்குகளை வேட்டையாடி அவற்றின் இறைச்சியை உணவாகப் பயன்படுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

அந்த வகையில் 83 யானைகள் உள்பட 723 காட்டு விலங்குகளை கொல்வதற்கு நமீபியா அரசு முடிவு செய்து இருக்கிறது.

தென் ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள உலகின் மிகப்பெரிய ஆப்பிரிக்க சவன்னா யானைகள் அதிகளவில் உள்ளன. இவை அழிந்து வரும் பட்டியலில் உள்ளன.

கடந்த மூன்று தலைமுறைகளில் அவற்றின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளது.ஆனால் சமீப ஆண்டுகளில், 2022 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, யானைகளின் எண்ணிக்கை 227,000-க்கும் அதிகமான யானைகளுடன் குறையாமல் இருக்கிறது. ஆனால், தற்போது கடுமையான வறட்சியால், உணவுக்காக யானைகள் கொல்லப்படும் சூழ்நிலையில், அவற்றின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

(Visited 5 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்

You cannot copy content of this page

Skip to content