இலங்கை செய்தி

நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ரணிலுக்கு ஆதரவு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர்களான சாரதி துஷ்மந்த மற்றும் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மைத்திரி அணியை பிரதிநிதித்துவப்படுத்திய இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களாவர்.

சாரதி துஷ்மந்த கேகாலை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நிலையில், அங்கஜன் இராமநாதன் யாழ்ப்பாணத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

இவர்கள் இருவரும் கொழும்பு பிளவர் வீதியிலுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் ஜனாதிபதியை சந்தித்த தமது ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

(Visited 2 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content