ஜார்க்கண்டில் மின்னல் தாக்கியதில் 3 ஹாக்கி வீரர்கள் பலி

ஜார்கண்ட் மாநிலம் சிம்தேகா மாவட்டத்தில் ஏற்பட்ட மின்னல் தாக்கத்தில் மூன்று வளரும் ஹாக்கி வீரர்கள் இறந்தனர், மேலும் ஐந்து பேர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
கோலேபிரா பகுதியில் உள்ள துடிக்கல் பஞ்சாயத்தில், ஜாப்லா ஆர்சி பள்ளிக்கு அருகிலுள்ள மைதானத்தில் ஹாக்கி வீரர்கள் போட்டிக்கு தயாராகிக்கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பலியானவர்கள் ஏனோஷ், செனன் டாங் மற்றும் நிர்மல் ஹோரோ என அடையாளம் காணப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அதிகாரி தெரிவித்தார்.
(Visited 37 times, 1 visits today)