இலங்கை செய்தி

மகனுக்கு ஆதரவளிக்குமாறு மகிந்த கோரிக்கை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் பல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தனது மகனுக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார் .

வழமையை விடவும் சிநேகபூர்வமாக முன்னாள் ஜனாதிபதி அந்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வேண்டுகோள் விடுத்து இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

தேர்தலுக்கு தேவையான செலவுகளை கூட தன்னால் வழங்க முடியும் என குறிப்பிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி, கட்சியில் தொடர்ந்தும் இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாமல் ராஜபக்சவுக்கு ஆதரவளிக்குமாறும், பின்னர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்குமாறும் மஹிந்த ராஜபக்ஷ விடுத்த கோரிக்கையும் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகரவின் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

(Visited 33 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!