இலங்கை செய்தி

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு

ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவதை தடுக்கும் உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி உயர் நீதி மன்றத்தில் இன்று மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது

சட்டத்தரணி சான் ஜயசூரியா இம் மனுவை சமர்ப்பித்துள்ளார்.

இலங்கையின் அரசியலமைப்பை மீறும் வகையில் ஜனாதிபதி செயற்பட்டு உள்ளதால் இம்மனுவை சமர்ப்பிப்பதாக சட்டத்தரணி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் 30(1) பிரிவுக்கிணங்க அரசியலமைப்பை பாதுகாப்பதாக அவர் வாக்குறுதியளித்துள்ள போதிலும்அதன் 107 (7) பிரிவுக்கிணங்க உயர்நீதிமன்றம் மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆகியவற்றுக்கான நீதிபதிகளை அவர் இதுவரை நியமனம் செய்யவில்லை.

அத்துடன் பதில் பொலீஸ் மா அதிபரை நியமிக்குமாறு உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள போதிலும் தான் தேர்தலில் போட்டியிடுவதாக கூறி அந்த உத்தரவைப் புறக்கணித்துள்ளார்.

ஆனால் அமைச்சர் அலி சப்ரிக்கு மேலும் ஒரு அமைச்சர் பதவியை வழங்கி முரண்பாடான விதத்தில் செயற்பட்டுள்ளார்.

எனவே அரசியலமைப்பை ஜனாதிபதி மீறி செயல்படுவதால் அவர் தேர்தலில் போட்டியிடுவதை தடை செய்யும் வகையில் தடை உத்தரவைப் பிறப்பிக்குமாறு அவர் இம்மனுவில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

(Visited 1 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content