இலங்கை செய்தி

இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான சின்னங்கள் வெளியீடு

இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கான தேர்தல் சின்னங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அதிவிசேட வர்த்தமானி மூலம் தேர்தல் சின்னங்கள் வௌியிடப்பட்டுள்ளதுடன், அவற்றில் 206 சின்னங்கள் காணப்படுகின்றன.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் நூற்றுக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த முறைப்பாடுகள் அனைத்தும் தேர்தல் விதிமுறைகளை மீறியமை தொடர்பானவை என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, தேசிய முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையம் ஆகியவற்றுக்கு 112 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

கடந்த ஜூலை மாதம் 31ஆம் திகதி முதல் நேற்று வரை மொத்தம் 269 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன

அந்த முறைப்பாடுகளில் வன்முறைச் செயல்கள் தொடர்பான ஒரு முறைப்பாடும் வேறு 02 முறைப்பாடுகளும் அடங்கியுள்ளன.

ஏனைய 266 முறைப்பாடுகள் அனைத்தும் தேர்தல் விதிமுறைகளை மீறியவை என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

(Visited 54 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!