ஐரோப்பா

துருக்கியில் இடம்பெற்ற கோர விபத்து : 09 பேர் பலி!

துருக்கியில் நகரங்களுக்கு இடையே பயணித்த பேருந்து ஒன்று நெடுஞ்சாலையில் இருந்து விலகி மேம்பாலம் தூணில் மோதியதில் அதில் பயணம் செய்த ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  மேலும் 26 பேர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் அங்காராவில் இருந்து சுமார் 80 கிலோமீட்டர் (50 மைல்) தொலைவில் உள்ள பொலட்லி நகருக்கு அருகில் இந்த விபத்து நிகழ்ந்ததாக ஆளுநர் வசிப் சாஹின் தெரிவித்தார்.

துருக்கியின் மேற்குப் பகுதியில் உள்ள இஸ்மிர் நகரில் இருந்து அந்நாட்டின் கிழக்கில் உள்ள அக்ரி நகருக்கு பேருந்து சென்று கொண்டிருந்தது.

நெடுஞ்சாலையின் ஒரு பக்கத்தை மூடுவதற்கு வழிவகுத்த விபத்திற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை என்பதுடன் மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 10 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்