வட அமெரிக்கா

அமெரிக்காவில் மீண்டும் பரபரப்பு – ஒரே வீட்டைச் சேர்ந்த 5 பேர் சுட்டுக்கொலை

அமெரிக்காவின் டெக்ஸஸ் மாநிலத்தில் வீடொன்றில் 5 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

5 பேரை சுட்டுக்கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் தேடப்பட்டு வருகிறார்.

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த அந்த 5 பேரும் ஹொண்டுராஸைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.

இது அமெரிக்காவை உலுக்கியிருக்கும் ஆகப்புதிய துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஆகும். கொல்லப்பட்டவர்களில் 8 வயது சிறுமி ஒருவரும் அடங்குவார்.

சம்பவத்தின்போது அந்த வீட்டில் இருந்தவர்கள் குழந்தையைத் தூங்க வைத்துக்கொண்டிருந்தனர்.

அப்போது அந்த ஆடவர் வீட்டின் கொல்லைப்புறத்தில் AR 15 ரக துப்பாக்கியை வைத்து சுட்டுக்கொண்டிருந்தார்.

துப்பாக்கியால் சுடுவதை நிறுத்துமாறு அந்தக் குடும்பத்தில் உள்ளவர்கள் நபரை கேட்டுள்ளனர்.

அதற்குப் பிறகுதான் அந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. துப்பாக்கிச் சூடு நடத்தியர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

அந்த நபர் மெக்சிக்கோவைச் சேர்ந்தவராகவும், சம்பவத்துக்குப் பிறகு அவர் நாட்டை விட்டு ஓடியிருப்பதாகவும் நம்பப்படுகிறது.

(Visited 3 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்

You cannot copy content of this page

Skip to content