திஸ்ஸமஹாராம பகுதியில் நடந்த சோகம்

திஸ்ஸமஹாராம கவுந்திஸ்ஸ புர பிரதேசத்தில் கல்குவாரி ஒன்றில் மூழ்கி தாயும் இரண்டு பெண் குழந்தைகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்றிரவு (21) தாயின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும், இரு குழந்தைகளின் சடலங்களை தேடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் திஸ்ஸமஹாராம பொலிஸார் தெரிவித்தனர்.
33 வயதுடைய தாயும், 14 மற்றும் 8 வயதுடைய இரண்டு சிறுமிகளும் உயிரிழந்துள்ளனர்.
இந்த கல்குவாரியில் நேற்று பிற்பகல் தாயும் இரண்டு குழந்தைகளும் நீராடச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
(Visited 37 times, 1 visits today)