இலங்கை செய்தி

தாரா கடவுள் சிலையை மீட்கும் பணிகள் முன்னெடுப்பு

இலங்கையில் இருந்து பிரித்தானியாவிற்கு கொண்டுச் செல்லப்பட்ட ‘கடவுள் சிலை’ உள்ளிட்ட தொல்பொருட்களை மீட்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு 07, அறக்கட்டளை நிறுவனத்தில் இன்று (08) நடைபெற்ற தேசிய தொல்லியல் மாநாட்டின் ஆரம்ப நிகழ்வின் பின்னர் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

நாட்டிலிருந்து  எடுத்துச் செல்லப்பட்ட பழங்கால பொருட்களை மீட்டுத் தந்த டச்சு அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அவர் கூறினார்.

இதன் இரண்டாம் பாகம் நெதர்லாந்தில் இருந்தும் பெற்றுக் கொள்ளப்படும் எனவும், பலவந்தமாக எடுத்துச் செல்லப்பட்ட இந்த வளங்களை இலங்கைக்கு மீள ஒப்படைக்க வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

தொல்லியல் என்ற சொல் பழமையானது என்பதால் பாரம்பரிய மேலாண்மை என்று மாற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார்.

தொல்பொருள் திணைக்களம் தொடர்பில் மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் பாரிய வேலைத்திட்டமொன்று அமுல்படுத்தப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

See also  இலங்கை பொலிஸ் தலைமையகத்தில் ஒன்றுக்கூடிய அதிகாரிகள் : சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள்!

தொல்பொருள் திணைக்களம் தனிமைப்படுத்தப்பட்ட நிறுவனமாக மாறுவதற்கு ஏனைய நிறுவனங்களுடன் தொடர்பில்லாததே காரணம் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

(Visited 4 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content