கருத்து & பகுப்பாய்வு

10 நாட்களில் பூமியை நோக்கி வரும் 5 சிறுகோள்கள் – நாசா வெளியிட்ட தகவல்

நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் லேபரட்டரியில் (ஜேபிஎல்) உள்ள டாஷ்போர்டின் படி, ஜூலை 8 முதல் ஜூலை 16 வரை ஐந்து சிறுகோள்கள் நமது பூமியைக் கடந்து பாதுகாப்பான தூரத்தில் செல்லும் என்று கூறியுள்ளனர்.

50 முதல் 240 அடி வரை விட்டம் கொண்ட சிறுகோள்களின் பாதைகள் நாசா விஞ்ஞானிகளால் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன.

ஜூலை 8 ஆம் திகதி முதல் சிறுகோள் 2024 MT1 936,000 மைல் தொலைவில் கடந்து செல்லும், அதைத் தொடர்ந்து 2024 ME1 பூமியிலிருந்து 2,700,000 மைல் தொலைவில் ஜூலை 10 அன்று கடந்து செல்லும், 2022 YS5 என்று பெயர் உள்ள சிறுகோள் ஜூலை 11-ம் திகதி பூமியில் இருந்து 2,620,000 மைல் தொலைவில் நெருங்கி வந்து கடந்து செல்லும் எனக் கூறியுள்ளனர்.

ஜூலை 13, 2024 அன்று NG சிறுகோள் 22,140,000 மைல்களைக் கடந்து செல்லும், கடைசியாக, ஜூலை 16 அன்று 2024 BY15 என்ற சிறுகோள் பூமியில் இருந்து 3,850,000 மைல்களுக்குள் கடந்து செல்லும் என்று நாசா கூறியுள்ளது.

See also  உலக அதிசயங்களில் ஒன்றான பெட்ராவில் இரகசிய கல்லறை கண்டுப்பிடிப்பு!

இதற்கிடையில், நாசாவின் டீப் ஸ்பேஸ் நெட்வொர்க்கின் கோல்ட்ஸ்டோன் கிரக ரேடார், 2024 MK மற்றும் 2011 UL21 ஆகிய இரண்டு சிறுகோள்களை பூமியை பாதுகாப்பாக கடந்து சென்றதை சமீபத்தில் கவனித்தது. எனினும் இந்த சிறுகோள்கள் பூமிக்கு ஆபத்து ஏற்படுத்தாது என்றும் பூமியில் இருந்து பாதுகாப்பான தூரத்தில் கடந்து செல்லும என்றும் கூறப்பட்டுள்ளது.

(Visited 8 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

உலகிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு – அதிர்ச்சி தகவல் வெளியிட்ட வானிலை ஆய்வகம்

  • April 22, 2023
உலகம் தொடர்ந்து வெப்பம் அடைந்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. உலக வானிலை ஆய்வகத்தின் அறிக்கை இந்த விடயம் கூறுகிறது. உலக வானிலையின் ஆகக்கடைசி அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த விடயம் கவலை

You cannot copy content of this page

Skip to content