இலங்கை செய்தி

இலங்கையில் அதிரடி சுற்றிவளைப்பு – ஆயிரத்திற்கும் அதிகமானோர் அதிரடி கைது

யுக்திய விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் இரண்டாம் கட்ட நடவடிக்கையின் போது1403 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

24 மணித்தியாலங்களுக்குள் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 57 பேர் மேலதிக விசாரணைகளுக்காகத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

கைதானவர்களில் 1340 ஆண்களும் 63 பெண்களும் அடங்குகின்றனர்.

அதேநேரம், இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது 1086 கிலோ கிராம் ஹெரோயின், 782 கிராம் ஐஸ் ரக போதைப்பொருள் மற்றும் 3 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள் என்பவற்றை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

அத்துடன், சட்டவிரோத சொத்துக்களை வைத்திருந்தமை தொடர்பில் மேலும் 17 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும், 24 சந்தேகநபர்கள் புனர்வாழ்விற்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

(Visited 5 times, 1 visits today)
See also  தஹாம் சிறிசேன மற்றும் ராஜிகா விக்கிரமசிங்க ஆகியோர் திலித்துடன் இணைகின்றனர்
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content