இலங்கையில் இடம்பெற்ற கோர விபத்து : நால்வர் பலி!

பதுளை – சொரனாதோட்டை வீதியின் வெலிஹிந்த பிரதேசத்தில் இன்று (05) நண்பகல் 12 மணியளவில் லொறியொன்று வீதியின் நடுவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மொனராகலையில் இருந்து வீதிகளில் பயணிகள் உறைகளை பொருத்துவதற்காக வந்தவர்களே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளனர்
காயமடைந்தவர்கள் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
(Visited 35 times, 1 visits today)