உலகம்

ரஷ்யா- வடகொரியாவுக்கும் இடையிலான ஒப்பந்தம் -சியோல்,வாஷிங்டன் கண்டனம்

ரஷ்யாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையிலான புதிய ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சியோலில் உள்ள ரஷ்யத் தூதருக்கு அழைப்பாணை விடுத்துள்ளதாகத் தென்கொரிய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

ரஷ்யத் தூதர் ஜார்ஜி ஸைனொவீவிடம், ரஷ்யாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையிலான புதிய ஒப்பந்தம், ராணுவ ஒத்துழைப்பு ஆகியவை குறித்த சோலின் நிலைப்பாட்டைத் தென்கொரியாவின் வெளியுறவு முதல் துணை அமைச்சர் கிம் ஹோங்-கியுன் எடுத்துரைத்ததாகத் தென்கொரிய வெளியுறவு அமைச்சு கூறியது.

முன்னதாக, இந்த ஒப்பந்தம் வட்டார அமைதிக்கும் நிலைத்தன்மைக்கும் கடுமையான மிரட்டலாக விளங்குவதாகத் தென்கொரிய, அமெரிக்க வெளியுறவு அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்தனர்.தென்கொரிய வெளியுறவு அமைச்சர் சோ டே-யுல்லும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கனும் அவ்வாறு கண்டனம் தெரிவித்ததாகத் தென்கொரிய வெளியுறவு அமைச்சு வெள்ளிக்கிழமை (ஜூன் 21) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இரு அமைச்சர்களும் வியாழக்கிழமை தொலைபேசி வழியாக உரையாடினர். மாஸ்கோவும் பியோங்யாங்கும் செய்துகொண்ட ஒப்பந்தத்திற்குப் பதிலளிக்கும் வழிகள் குறித்து இருவரும் கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்பட்டது.மேலும், நிலைமையை அணுக்கமாகக் கண்காணிக்கவும் இரு அமைச்சர்களும் இணங்கியதாகத் தென்கொரிய வெளியுறவு அமைச்சு கூறியது.

See also  இன்றைய தினம் வானில் ஏற்படவுள்ள மாற்றம்

South Korea blasts Russia-North Korea deal, says it will consider possible  arms supplies to Ukraine

புதிய ஒப்பந்தத்தின்கீழ், ரஷ்யாவோ வடகொரியாவோ ராணுவ மிரட்டல்களை எதிர்நோக்கினால், உடனடியாக ராணுவ உதவி வழங்க பியோங்யாங்கும் மாஸ்கோவும் இணக்கம் கண்டுள்ளன.இதன் தொடர்பில் தென்கொரியா மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா ஆதரவு தரும் என்று பிளிங்கன் கூறியுள்ளார்.

வடகொரியாவின் ராணுவத் திறனை வலுப்படுத்த வழங்கப்படும் எந்தவோர் ஆதரவு நடவடிக்கையும் ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றத் தீர்மானங்களை மீறுவதாகும் என்று சோ கூறியதாக அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது.

அனைத்துலக அமைதிக்கும் நிலைத்தன்மைக்கும் ரஷ்யாவும் வடகொரியாவும் விடுத்துள்ள மிரட்டலுக்குப் பதிலளிக்கும் பல்வேறு வழிகள் குறித்து அமெரிக்கா பரிசீலிக்கும் என்று அமைச்சர் பிளிங்கன் கூறியதாகத் தென்கொரிய அமைச்சு கூறியது.

முன்னதாக, ரஷ்யாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையிலான ஒப்பந்தத்திற்கு பதிலடி தரும் விதமாக, உக்ரேனுக்கு ஆயுதம் வழங்குவது குறித்து சோல் மறுஆய்வு செய்யவிருப்பதாகத் தென்கொரிய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சாங் ஹோ-ஜின் வியாழக்கிழமை கூறினார்.

ரஷ்யாவுக்கு எதிராகத் தென்கொரியா உக்ரேனுக்கு ஆயுதங்கள் வழங்கினால் அது ‘மிகப் பெரிய தவறிழைத்ததாகும்’ என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் எச்சரித்துள்ளார்.தமது வியட்னாமியப் பயணத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.

See also  முத்தமிடுவதற்கு கூட சில விதிகள் : கடுமையான உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட பெண்!

இதற்கிடையே, ஜூன் 20ஆம் திகதி காலை வடகொரிய வீரர்கள் சிலர் இரு கொரியாக்களுக்கும் இடையிலான எல்லையைக் கடந்ததால் தென்கொரிய ராணுவம் அவர்களை எச்சரிக்கும் விதமாகச் சுட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதையடுத்து வடகொரிய வீரர்கள் பின்வாங்கியதாகத் தென்கொரியாவின் ஆயுதப்படைத் தலைவர்கள் குழு (ஜேசிஎஸ்) தெரிவித்தது.

(Visited 3 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்

You cannot copy content of this page

Skip to content