ஐரோப்பா

பிரான்ஸ் மக்கள் கடனாளியாக மாறும் நிலை

பிரான்ஸில் கடந்த பெப்ரவரி மாதத்தில் 5.6% சதவீதமாக இருந்த பணவீக்கம், தற்போது 5.7% சதவீதமாக அதிகரித்துள்ளது.

பணவீக்கம் அதிகரித்துள்ளதை அடுத்து, அத்தியாவசியப்பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக INSEE கருத்துக்கணிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

உணவுப்பொருட்களின் விலை கடந்த பெப்ரவரி மாதத்தில் 14.8% சதவீதத்தால் அதிகரித்திருந்த நிலையில், மார்ச் மாதத்தில் 15.9% சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

குறிப்பாக, பழங்கள், மரக்கறிகள், பாண், சீரியல், இறைச்சி, சீஸ், சொக்கலேட் மற்றும் குளிர்பானப்பொருட்கள் போன்றவற்றின் விலை அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த ஜனவரி மாதம் குடும்பங்கள் தங்கள் தற்போதைய நுகர்வுச் செலவுகளுக்குச் செலுத்துவதற்காக கடனை அதிகமாகப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான நிலைமை நீடித்தால் மக்கள் கடும் நெருக்கடி நிலைக்குள்ளாகும் நிலை உருவாகும் என INSEE கருத்துக்கணிப்பு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

(Visited 10 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
Skip to content