குழந்தையை கொடூரமாக தாக்கிய தந்தை கைது

சமூக ஊடகங்களில் பரவிய சிறு குழந்தையைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் மற்றும் இரண்டு பெண் சந்தேகநபர்கள் உட்பட சந்தேகநபர்கள் அனைவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களை பதவிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதன் பின்னர், அவர்களை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், தாக்கப்பட்ட 4½ வயது குழந்தை பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலை நடத்திய நபர் மற்றும் தாக்குதலுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்ட மேலும் இரு பெண்களும் இன்று (05) காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
45 வயதுடைய ஆண் ஒருவரும் 37 மற்றும் 46 வயதுடைய இரண்டு பெண்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
(Visited 13 times, 1 visits today)