இலங்கையில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை
நாளைய தினம் இலங்கையில் உள்ள அனைத்து பாடசாலைகளும் மூடப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
சீரற்ற வானிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார் தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளை மூடும் அதிகாரம் மாகாண கல்வி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தற்போது நிலவும் வெள்ளம் மற்றும் மோசமான காலநிலை காரணமாகவும், கனமழையுடன் ஆறுகள் பெருக்கெடுத்து ஓடியதாலும் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதாலும் பயண நடவடிக்கைகள் தடைபட்டதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
(Visited 25 times, 1 visits today)





