ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் வரும் வார இறுதியில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

வார இறுதியில் 80 வீதமான பகுதிகளில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கைகளின்படி, சிட்னியில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கும் மழை அடுத்த வாரம் திங்கட்கிழமை வரை நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

வியாழன் அன்று மெல்போர்ன் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை தொடங்கி ஞாயிறு வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெற்கு ஆஸ்திரேலியாவின் தலைநகரான அடிலெய்டைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வியாழக்கிழமை மழை தொடங்கி திங்கள் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரிஸ்பேனில் இன்று முதல் மழை தொடங்கும் என்றும் ஈரமான வானிலை வாரம் முழுவதும் தொடரும் என்றும் கூறப்படுகிறது.

சில பகுதிகளில் மணிக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் அவுஸ்திரேலியர்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

SR

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித
error: Content is protected !!