பொழுதுபோக்கு

சிவகார்த்திகேயனின் இடத்தை தட்டித் தூக்கிய கவின்.. வருகின்றது வெற்றிப் படத்தின் 2ம் பாகம்

சிவகார்த்திகேயனை பார்த்துதான் கவின் மனதிற்குள் நம்மளுக்கும் சினிமாவில் விடிவுகால பிறக்கும் என்று நம்பிக்கை ஏற்படுத்திருக்கிறது என்று அவரே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

ஏனென்றால் பல நடிகர்கள் எட்டாத தூரத்தில் இருந்த பொழுது சிவகார்த்திகேயன் மட்டும் தான் கவினுக்கு நெருங்கிய தூரத்தில் இருந்திருக்கிறார்.

அதனால் அவரிடம் அடிக்கடி பழகும் வாய்ப்புகள் ஏற்பட்டிருக்கிறது. அந்த ஒரு காரணத்தினாலேயே இவருடைய செயல்கள் எல்லாம் பார்ப்பதற்கு கொஞ்சம் சிவகார்த்திகேயனை போல் இருக்கிறது என்று பேச்சுக்கள் அடிபடுகிறது. அதுமட்டுமில்லாமல் கவின் தான் அடுத்த சிவகார்த்திகேயன் என்று சொல்லும் அளவிற்கு பெயரெடுத்து விட்டார்.

அதனால் இயக்குனர்கள் பலரும் கவினை தேடி வாய்ப்புகளை கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் சிவகார்த்திகேயன் கேரியரில் மறக்க முடியாத வெற்றி படம் தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம்.

இப்படத்தை மறுபடியும் எடுக்கும் முயற்சியில் இயக்குனர் பொன்ராம் இறங்கிவிட்டார். அதாவது வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கப் போகிறது. ஆனால் இப்படத்திற்கு சிவகார்த்திகேயன் செட் ஆக மாட்டார் என்று இயக்குனர் முடிவு பண்ணி விட்டார்.

அதுமட்டுமில்லாமல் இந்த கேரக்டருக்கு வளர்ந்து வரும் ஹீரோ மட்டும் தான் செட் ஆகும் என்பதால் கவினை வைத்து எடுக்கப் போகிறார். இதற்கான வேலைகள் ஒவ்வொன்றும் இனி மும்மரமாக நடைபெற போகிறது.

சிவகார்த்திகேயன் கேரக்டருக்கு கவின் ரொம்பவே பொருத்தமாக இருப்பார். ஆனால் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் முக்கியமான ஆணிவேராக இருந்தது சூரி.

அதனால் இவருடைய கேரக்டருக்கு யார் செட்டாகுவார் என்று இயக்குனர் சல்லடை போட்டு தேடிக் கொண்டு வருகிறார். அந்த வகையில் கவினின் நண்பராக இருக்கும் சாண்டி மாஸ்டருக்கு அந்த கதாபாத்திரத்தை கொடுக்கலாமா என்ற பேச்சும் அடிபட்டு வருகிறது. ஒரு பக்கம் கவின் இருந்தாலும் இன்னொரு பக்கம் சூரி கேரக்டருக்கு ஏற்ற ஒரு காமெடி நடிகர் இருந்தால் மட்டும்தான் அந்த படம் வெற்றியை கொடுக்கும்.

(Visited 4 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content