இலங்கை

சட்டவிரோத கருக்கலைப்பு : 2 இலங்கையர்கள் ஜப்பானில் கைது!

சட்டவிரோத கருக்கலைப்பு தொடர்பாக ஜப்பானில் இரண்டு இலங்கையர்கள் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளனர்,

மேலும் சர்வதேச மாணவர்களின் நிலையற்ற குடியுரிமை இந்த சம்பவத்தின் பின்னணியில் ஒரு காரணியாக இருக்கலாம் என நிபுணர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜப்பானின் இபராகி பிரதேசத்தில் வசிக்கும் 30 வயதுடைய பெண்ணொருவரும் கருக்கலைப்புக்கு உதவி செய்ததாகக் கூறப்படும் அவரது காதலனுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சட்டவிரோத கருக்கலைப்பின் போது குறித்த பெண் 9 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி அன்று தனது காதலனின் வீட்டில் வைத்து போதைப்பொருள் பயன்படுத்தி சட்டவிரோதமாகக் கருக்கலைப்பு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் இருவரும் கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி மகப்பேறு தொடர்பான வைத்தியரொருவரை சந்தித்துக் கருக்கலைப்பு செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளதுடன் ஜப்பான் சட்டத்தின் கீழ் கருக்கலைப்பு செய்ய அனுமதிக்கப்பட்ட காலம் கடந்துவிட்டதால் கருக்கலைப்பு செய்ய முடியாது என வைத்தியர் கூறியுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளன.

(Visited 7 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content